வலையுலக நண்பர்கள்

Saturday 7 May, 2011






தாயாநந்த சரஸ்வதி சுவாமிகள் ஆஸ்ரமம் ஆனைகட்டி - கோவை 


என்ன  இது  சட்டைஎன்று  கூறிவிட்டு  பயணக்கட்டுரை எழுதி கொண்டிருக்கிறாயே ஒரு கார  சாரமே
இல்லையே என கேட்க வேண்டாம்.உலக வரைபடத்தில் குறிப்பிடுமளவுக்கு கோவை வளர்ந்து விட்டாலும் அதனுள் இருக்கும் அதிசயங்கள் உலகுக்கு தெரியத்தான் இந்த அறிமுக கட்டுரை சட்டையின் வேலை பிறகு ...

அது 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நண்பரொருவரின் வர்ப்புருத்தளினாலே  ஆனைகட்டி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆஸ்ரமத்திற்கு செல்ல முடிவெடுத்தோம். நாங்கள் நான்கு பேர் இரண்டு டூ வீலரில் கோவை சாய்பாபா காலனியிலிருந்து கிளம்பினோம். காணுவாய் என்ற கிராமத்தை தாண்டி சென்றதும் வனம் நம்முடன் பயணிக்கிறது அடுத்து தடாகம் மாங்கரை என்ற கிராமங்களை தாண்டியவுடன் அதுவரை தெரிந்த ஒரு சில வீடுகளும் மறைகிறது. வழியில் சில செங்கல் காளவாய்களும் உள்ளன. மாங்கரையிலிருந்து வனத்துறை கட்டுப்பாடு ஆரம்பமாகிறது மாங்கரை செக்போஸ்ட் அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு மேற்கொண்டு பயணம் ஆரம்பம். செக்போஷ்டிலேயே யானை நடமாட்டம் பற்றி சொல்கின்றனர். முன்னெச்சரிக்கையோடு பாதையை கவனித்தபடி செல்கிறோம் நாம் ஒரு பத்து கிலோ மீட்டர் பயணம் போகும் இடமெல்லாம் பசுமை. பசுமை .பசுமை. பசுமையை தவிர வேறெதுவுமில்லை இந்த இடம் இன்னும் அவ்வளவாக ஜனநெருக்கடிக்கு ஆளாகமளிருப்பதால் நகர வாழ்க்கைக்கு சற்று நேர  ஒய்வு .

சிறிது நேர தொலைவில் ஆஷ்ரமம் வருகிறது ஆஸ்ரமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் ஆனைகட்டி என்ற சிற்றூர் வருகிறது இது தான் தமிழக எல்லை முடிவு ஒரு பாலத்திற்கு அந்த பக்கம் லாட்டரி சீட்டு கடைகள் அதிகம்  தென்படுகின்றன. இதை வைத்து கேரளா எல்லை ஆரம்பமாவதை  தெரிந்து கொள்ளலாம். கேரளா அரசு என்றுதான் இதை ஒழிக்க போகிறதோ தெரியவில்லை ,

மீண்டும் ஆஸ்ரமத்திற்கு வருவோம் ஆஸ்ரமத்தின் கேட்டை தாண்டியதுமே ஒருவித அமைதி, வலது பக்கம் செல்லும் மண் தடத்தில் சென்றால் ஒரு ஆலயம் தென்படுகிறது அருகே நெருங்கி பார்த்தால் அங்கு சாந்த சொரூபமாக தட்சினா மூர்த்தி அமர்ந்திருக்கிறார் அங்கு சிலர் பூஜைக்காக கூடி இருந்தனர் அவர்கள் எங்களை சீக்கிரம் மலை மீது உள்ள கோவிலுக்கு செல்லுங்கள் மாலை 4 மணிக்கெல்லாம் கோவில் நடை சாத்தி விருவார்கள் என்றனர், உடனே ஆலயத்தினருகில் உள்ள மண் தடத்தில் நடக்க ஆரம்பித்தூம் ஆஸ்ரம குடில்களை எல்லாம் தாண்டி ஒரு சிறிய மலை அதன் மேல் முருகன் கோவில் அங்கிரிந்து பார்த்தால் ஆஸ்ரமம் முழுமையுமே தெரிகிறது அவ்வளவு ரம்மியமான  காட்சி சிறிது நேரம் ரசித்து பார்த்துவிட்டு முருகனையும் வணங்கிவிட்டு கீழிறங்கினோம்.

 அடுத்து தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு வந்தோம் அன்று வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கோவிலில் மிகவும் விசேசம். கூட்டம் ஒன்றும் பெரிய அளவில் இல்லை எங்கள் நான்கு பேரையும் சேர்த்து மொத்தம் முப்பது பேர்தான் இருப்போம் பெண்கள் சிலர் பஜனை பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர் அந்த பாடல்களுக்கும் அந்த சூழ்நிலைக்கும் நாங்கள் மெய்மறந்து விட்டோம், அட இத்தனை நாள் இப்படி ஒரு விஷயத்தை இழந்து விட்டோமே என மனம் அலுத்துக்கொண்டது.
பூஜை முடிந்த பிறகு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது பிறகு அரை மணி நேரம் அமர்ந்துவிட்டு கிளம்ப ஆயத்தமானோம் உடனே அங்கிருந்தவர்கள் உணவருந்தி விட்டு செல்லலாமே என கூறினார் பிறகு ஆசிரமத்தில் உணவருந்தும் அறைக்கு சென்று தட்டுகளை நாமே எடுத்து சாப்பிட்டு விட்டு நாமே அதை கழுவி வைத்து விட்டு வந்தோம் வானம் இருட்டி விட்டது எப்படியோ ஒரு வழியாக இருளுக்கும் யானைக்கும் பயந்து பயந்து வீடு வந்து சேர்ந்தோம்.  அதன் பிறகு செல்லும் போதெல்லாம் பேருந்தில்தான் சென்றேன். மன அமைதி வேண்டும் போதெல்லாம் அங்கு சென்று விடுவேன்.  இவர்களின் இன்னொரு ஆஸ்ரமம் ரிஷிகேஷில் உள்ளது. ரஜினி அவர்கள் அடிக்கடி செல்வதால் ரிஷிகேஷ் பிரபலமடைந்தது போல அந்த ஆஸ்ரமம் பிரபலம் அடையவில்லை இங்கும் அவர் அடிக்கடி சத்தமில்லாமல் வருகிறார் போகிறார் அனால் அது யாருக்கும் தெரிவதில்லை ரிஷிகேஷ் ஆஸ்ரமம் பற்றி பிறகு ஒரு  இடுகையில் விலாவரியாக அலசலாம் உடனே தெரிந்து கொள்ள நமது நண்பரின் வலை தளம்  www.arivhedeivam.blogspot.com   சென்று பார்க்கவும் இன்னொரு முக்கியமான குறிப்பு தயவு செய்து யாரு டூ வீலரில் செல்ல வேண்டாம் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து varuvathal  கூறுகிறேன் .


கோவிலைப்பற்றி :

விசேஷ தினங்கள் 
அமாவாசை, பவுர்ணமி,வியாழக்கிழமை.

தங்குமிடங்கள் :
ஆச்ரமத்திலும்,ஆஸ்ரமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தாங்கும் விடுதி ஒன்றும் உள்ளது பெரும்பாலும்  தங்குவதற்கு கோவை வந்து விடுவது நல்லது நமது பட்ஜெட்டிற்கு அணைகட்டி  விடுதி சரிவராது

ஆனைகட்டியை பற்றி :

கோவையிலிருந்து கேரளா செல்ல பாலக்காடு வழியாக செல்வோம் இன்னொரு வழியும் உள்ளது அந்த வழிதான் வேலாண்டி பாளையம், காணுவாய்,மாங்கரை, ஆனைகட்டி வழியாக கேரளாவுக்குள் அகழி,மன்னார்க்காடு,வழியாக கோழிக்கோடு செல்கிறது இந்த வழியாக மன்னார்க்காடு கோழிக்கோடு சென்றால் பாலக்காடு வழியாக   செல்வதை விட 50 கிலோ மீட்டர் தூரம் குறைவு கோவையிலிருந்து அனைகட்டிக்கு தமிழக அரசு மற்றும் கேரளா அரசு சார்பாக பேருந்துகள் நிறைய உள்ளன

நீங்களும் ஒரு முறை வந்து பாருங்க.......... 
 

தவறாமல் கருத்து சொல்லுங்கள் நான் வளர 

4 comments:

குணசேகரன்... said...

nice post.thanks for info

ப.கந்தசாமி said...

அன்புள்ள சாட்டைக்கு,

குறை சொல்லுகிறேன் என்று வருந்தாதீர்கள்.

கீழ்வரும் வார்த்தைக்கு எனக்கு பொருள் விளங்கவில்லை.

//வர்ப்புருத்தளினாலே//

பதிவர் படத்தைப் பார்த்ததும் தூக்கம் வருகிறதே, என்ன செய்யலாம்?

!? கோவை சாட்டை ?! said...

அன்புள்ள சாட்டைக்கு,

குறை சொல்லுகிறேன் என்று வருந்தாதீர்கள்.

கீழ்வரும் வார்த்தைக்கு எனக்கு பொருள் விளங்கவில்லை.

//வர்ப்புருத்தளினாலே//

முதல் தடவை மட்டும் தான் வற்புறுத்தினர், பிறகு நான் அவர்களை வற்புறுத்தினேன்.

!? கோவை சாட்டை ?! said...

குணசேகரன்... said...
nice post.thanks for info
என் பிளக்கில் வந்து பதிவளித்தமைக்கு நன்றி , தொடரட்டும் உங்கள் ஆதரவு.............

Post a Comment